கைக்குட்டை
Posted by premkalvettu as Uncategorized
கைக்குட்டை
உன்
வியர்வையில் குளித்ததை
அழுக்காக்கி விடாதே!!
துவைத்து…
கி.பிரேம்குமார்
உன்
வியர்வையில் குளித்ததை
அழுக்காக்கி விடாதே!!
துவைத்து…
கி.பிரேம்குமார்
Popularity: 5%
August 11, 2005 | Filed Under Uncategorized | Comments Off
ஊமையாய் நான்…..
Posted by premkalvettu as Uncategorized
ஊமையாய் நான்…..
தோட்டத்துல மல்லிப்பூ பூத்திருந்தும்
தொடுத்து வைக்க முடியலயே!
வாழத்தடையில பூ தொடுப்பாக பார்த்திருக்கேன்
உன் உசிருல தொடுத்ததேன்னு தெரியலையே!
புற்றுநோய் எனத் தெரிந்திருந்தும்
பொட்டு வச்சு போனவனே
வியர்வையில குளிக்கையில் தெரியாமல்
போனதய்யா
கண்ணீரில் நீ நீந்தவைப்பன்னு.
கல்யாணச் சிரிப்பு அடங்குமுன்னே
சந்திசிரிச்சி போனதய்யா என் வாழ்க்க
பந்திக்கு இல போடுமுன்னே
பந்தி முடிஞ்சதேன்னு புரியலையே!
மஞ்சக் கயத்தில என் வாழ்க்கையை
தூக்கிலிட்டுப் போனவனே!
உயிர் போன பின்பு ஒப்பாரி வச்சவுக,
நீ போன காரணம் தெரிஞ்சிருந்தும்
நான் வந்த நேரமுன்னு சொல்லி
உயிரோட எரிக்கிறாக என்னை.
முழுகாம நான் இருக்குமுன்னே
மூழ்கிப் போனதய்யா என் வாழ்க்கை
கல்யாணத்துக்கு கட்டின வாழையின்னும்
கருகலையே!
என் வாழ்க்கை பட்டுப்போனதேன்னு
தெரியலையே
கைக்குள்ள அடங்காத உன் உடம்பு
சட்டிக்குள்ள அடங்கிப்போன மர்மமென்ன?
ஏத்திவச்ச குத்துவிளக்கு அணையலையே!
கொள்ளிக்கட்டைக்கு நெருப்பானதேன்னு
புரியலையே
பொட்டு வாங்க வச்சிருந்த ஒத்த ரூபா
பொட்டாகிப் போனதடா உன் நெத்தியில
கட்டியிருந்த சேல முழுசா கசங்கலையே!
‘கோடி’ சேலைக்கு என்ன அவசரமுன்னு தெரியலையே!
என் வாழ்க்க சின்னாபின்னமானதடா
உன் மரணச் சின்னமாகிப் போனேனடா
நடமாடும் கல்லறையாகிப் போனதாலோ என்னவோ
சொல்ல முடியாமல் ஊமையாகிப் போனேனடா!
கி.பிரேம் குமார்
தோட்டத்துல மல்லிப்பூ பூத்திருந்தும்
தொடுத்து வைக்க முடியலயே!
வாழத்தடையில பூ தொடுப்பாக பார்த்திருக்கேன்
உன் உசிருல தொடுத்ததேன்னு தெரியலையே!
புற்றுநோய் எனத் தெரிந்திருந்தும்
பொட்டு வச்சு போனவனே
வியர்வையில குளிக்கையில் தெரியாமல்
போனதய்யா
கண்ணீரில் நீ நீந்தவைப்பன்னு.
கல்யாணச் சிரிப்பு அடங்குமுன்னே
சந்திசிரிச்சி போனதய்யா என் வாழ்க்க
பந்திக்கு இல போடுமுன்னே
பந்தி முடிஞ்சதேன்னு புரியலையே!
மஞ்சக் கயத்தில என் வாழ்க்கையை
தூக்கிலிட்டுப் போனவனே!
உயிர் போன பின்பு ஒப்பாரி வச்சவுக,
நீ போன காரணம் தெரிஞ்சிருந்தும்
நான் வந்த நேரமுன்னு சொல்லி
உயிரோட எரிக்கிறாக என்னை.
முழுகாம நான் இருக்குமுன்னே
மூழ்கிப் போனதய்யா என் வாழ்க்கை
கல்யாணத்துக்கு கட்டின வாழையின்னும்
கருகலையே!
என் வாழ்க்கை பட்டுப்போனதேன்னு
தெரியலையே
கைக்குள்ள அடங்காத உன் உடம்பு
சட்டிக்குள்ள அடங்கிப்போன மர்மமென்ன?
ஏத்திவச்ச குத்துவிளக்கு அணையலையே!
கொள்ளிக்கட்டைக்கு நெருப்பானதேன்னு
புரியலையே
பொட்டு வாங்க வச்சிருந்த ஒத்த ரூபா
பொட்டாகிப் போனதடா உன் நெத்தியில
கட்டியிருந்த சேல முழுசா கசங்கலையே!
‘கோடி’ சேலைக்கு என்ன அவசரமுன்னு தெரியலையே!
என் வாழ்க்க சின்னாபின்னமானதடா
உன் மரணச் சின்னமாகிப் போனேனடா
நடமாடும் கல்லறையாகிப் போனதாலோ என்னவோ
சொல்ல முடியாமல் ஊமையாகிப் போனேனடா!
கி.பிரேம் குமார்
Popularity: 6%
August 11, 2005 | Filed Under Uncategorized | Comments Off
கவிதையும் போராட்டமும்
Posted by premkalvettu as Uncategorized
நிராகரித்து விடுங்கள்
என் கவிதையை
அழக்கூட முடியாத
ஆற்றாமையின் வெளிப்பாடுதானே
அது!!??
கவிதை மட்டும்தான்
காயப்பட்டுப் போகிறது
என் கண்ணீரின்
ஈரத்தில்….
அதன் காயங்கள்
சொல்லிப்போகும்
நிராகரிப்பின்
வேதனையை
கவிதையும் போராட்டமும்
ஒன்றுதான்
போராடுபவர்களுக்கு
புரியும்
அதன் நியாய அநியாயங்கள்
“வந்தால் மலை போனால்
மயிர்”
என்று சொல்வதற்கு
பணயம் வைக்கப்படுவது
மயிர் அல்ல
உயிர்
அதுசரி
அடுத்தவன் உயிர்
உங்களுக்கு மயிர் தானே!!
பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்
மனிதனாக பிறந்தது
உங்கள் குற்றமா என்ன???
ஒடித்துப்போடுங்கள்
உங்கள் தராசின் முட்களை
போதையில் ஆடும் அதன்
ஆட்டத்தின் முடிவை
எதிர்பார்த்தில்லை
போராட்டமும்
என் கவிதையும்.
என் கவிதையை
அழக்கூட முடியாத
ஆற்றாமையின் வெளிப்பாடுதானே
அது!!??
கவிதை மட்டும்தான்
காயப்பட்டுப் போகிறது
என் கண்ணீரின்
ஈரத்தில்….
அதன் காயங்கள்
சொல்லிப்போகும்
நிராகரிப்பின்
வேதனையை
கவிதையும் போராட்டமும்
ஒன்றுதான்
போராடுபவர்களுக்கு
புரியும்
அதன் நியாய அநியாயங்கள்
“வந்தால் மலை போனால்
மயிர்”
என்று சொல்வதற்கு
பணயம் வைக்கப்படுவது
மயிர் அல்ல
உயிர்
அதுசரி
அடுத்தவன் உயிர்
உங்களுக்கு மயிர் தானே!!
பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்
மனிதனாக பிறந்தது
உங்கள் குற்றமா என்ன???
ஒடித்துப்போடுங்கள்
உங்கள் தராசின் முட்களை
போதையில் ஆடும் அதன்
ஆட்டத்தின் முடிவை
எதிர்பார்த்தில்லை
போராட்டமும்
என் கவிதையும்.
Popularity: 6%
July 27, 2005 | Filed Under Uncategorized | Comments Off


